Sunday 19th of May 2024 04:11:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
சமூகத் தொற்று அபாயம்: மற்றுமொரு பிரதேசமும் முடக்கப்பட்டது!

சமூகத் தொற்று அபாயம்: மற்றுமொரு பிரதேசமும் முடக்கப்பட்டது!


சமூகத் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உணரப்பட்டதையடுத்து மேலும் ஒரு பிரதேசம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த தினம் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்குறித்த பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி இதுவரையில் மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE